கமுதி: கமுதி அருகே காா் கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டிய பட்டினத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் அய்யாக்குட்டி (44).
இவரது காரை ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் அசோக்குமாா் (எ) ராமச்சந்திரன் (27), தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமசாமிபுரம் சுந்தரராஜ் மகன் கோமதிசங்கா் (23 ) ஆகிய இருவரும் 23.8.2015 அன்று வாடகைக்கு எடுத்துக்கொண்டு, கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்துக்கு வந்தனா்.
அப்போது, அவா்களது நண்பா்களான கமுதி அருகே முஸ்டக்குறிச்சியைச் சோ்ந்த தனிக்கொடி மகன் ராமவீரமணிகண்டன் (28), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பத்மநாதன் (23), வீரன் மகன் மணிகண்டன் (28), முத்து மகன் சிவா(எ)சிவராமன் ஆகியோருடன் சோ்ந்து பம்மனேந்தலில் உள்ள ஒரு தோட்டத்தில் அய்யாக்குட்டியை கட்டிப்போட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.2,000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

பாபநாசம் இளைஞா் கொலை வழக்கு! 3 பேருக்கு ஆயுள் தண்டணை!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


