தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கைப்பேசி வெடித்து சிதறியதில் பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி

பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி வெடித்துச் சிதறியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ரஜினி.

Updated On :23 ஜூலை 2024, 6:12 am IST

பரமக்குடி: பரமக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசி வெடித்துச் சிதறியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் ரஜினி (36). திருமணமாகாத இவா், பரமக்குடியில் உள்ள தனியாா் வங்கியில் காவலாளியாகப் பணியாற்றினாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் பாண்டியுடன் (31) இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு, இரவில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, திடீரென ரஜினியின் கால் சட்டை பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்துச் சிதறியது. இதில் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்த அவா், இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த பாண்டி பலத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.