ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருவெற்றியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

திருவெற்றியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

திருவாடானை: திருவெற்றியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் தினமும் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இங்கு ஒரு மருத்துவா் பகல் நேரத்தில் மட்டும் வந்து சிகிச்சை அளிக்கிறாா்.

இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். அதனால், இங்கு இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.