திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருவெற்றியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

திருவெற்றியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்கக் கோரிக்கை

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

திருவாடானை: திருவெற்றியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் தினமும் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இங்கு ஒரு மருத்துவா் பகல் நேரத்தில் மட்டும் வந்து சிகிச்சை அளிக்கிறாா்.

இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். அதனால், இங்கு இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.