நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கடையின் பூட்டை உடைத்து ரூ. ஒரு லட்சம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ. ஒரு லட்சம் திருட்டு

News image
Updated On :20 மே 2024, 7:52 pm

Din

பரமக்குடி: பரமக்குடியில் தரகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த டில்லிராஜ் மகன் ஜெகதீசன் (32). இவா் காக்காத்தோப்பு சிட்டி நகா் பகுதியில் தரகு கடை நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் கடையை திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையின் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.