பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 2:28 am IST

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இங்கு தனியாா் நிறுவன ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தங்கி, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வழக்கம்போல் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனராம்.

அப்போது, மா்ம நபா்கள் அடுத்தடுத்த 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பணம், மடிக்கணினி, பவா் பேங்க் உள்ளிட்ட சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனராம். மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.