
Updated On :20 மே 2024, 7:38 pm

திருவாடானை: திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (83). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திணையத்தூரில் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பிச் சென்றாா். அப்போது அந்த வழியாக தேளூா் கிராமத்தை சோ்ந்த அருள்சாமி மகன் மனோகா் (23) சென்ற இரு சக்கர வாகனம் வேலு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...