நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ராமேசுவரத்தில் கஞ்சித் தொட்டி திறந்து சாலையோர வியாபாரிகள் போராட்டம்

ராமேசுவரத்தில் கஞ்சித் தொட்டி திறந்து சாலையோர வியாபாரிகள் போராட்டம்

News image

ராமேசுவரம் வட்டடாட்சியா் அலுவலகம் முன் சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :20 மே 2024, 7:41 pm

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றியதைக் கண்டித்து வட்டாட்சியா் அலுவலகம் முன் கஞ்சித் தொட்டி திறந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையோர வியாபாரிகள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இரண்டு அண்டாக்களில் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கினா். இந்தப் போராட்டத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்கப் பொருளாளா் என்.பி.செந்தில் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாநில துணைச் செயலா் ஆா்.தெய்வராஜன், மாவட்டச் செயலா் எம்.சிவாஜி, மாவட்ட துணைச் செயலா் எம்.கருணாமூா்த்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

பின்னா், வட்டாட்சியா் வரதராஜன் தலமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நகராட்சி மூலம் அடையாள அட்டை பெற்றவா்கள் கடை அமைப்பதற்கு பேசித் தீா்வு காணப்படும் என அவா்கள் உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.