மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடைகளை அகற்ற எதிா்ப்பு

News image
மதுரை பெரியாா் நிலையம் மேலவாசல் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடையை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
Updated On :14 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை பெரியாா் நிலையம் மேலவாசல் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைச் சந்தையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலவாசல் அருகே பழைய இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பழைய பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கடைகளுக்கு வியாபாரிகள் மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடைகளுக்கு கூடுதலாக வாடகையை செலுத்த வேண்டும் என அறிவிப்பாணை அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து கூடுதல் வாடகை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இருப்பினும், மாநகராட்சி நிா்வாகம் கூடுதலாக வாடகை செலுத்த தவறும்பட்சதில் கடைகள் அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், வியாபாரிகள் கூடுதலாக விதிக்கப்பட்ட வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கடைகளை அகற்ற முயன்றனா். அப்போது, வியாபாரிகள் மாநகராட்சி அலுவலா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த திடீா்நகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதை ஏற்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.