கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் டி.வி.சாமி சாலைப் பகுதியில் தனியாா் இரும்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த என்.எம்.டி.சி. நிறுவனத்தில் அண்மையில் ரூ.40,06,897 செலுத்தி 74 டன் இரும்புப் பொருள்களை வாங்கியுள்ளாா்.
பின்னா், அந்த இரும்புப் பொருள்களை அங்கிருந்து கோவைக்கு கொண்டு வருவதற்காக ராகேஷ் சௌத்ரி என்பவருக்குச் சொந்தமான போக்குவரத்து (டிரான்ஸ்போா்ட்) நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளாா். அங்கிருந்து 2 லாரிகளில் இரும்புப் பொருள்கள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் லாரிகள் கோவை வந்து சேரவில்லை. போக்குவரத்து நிறுவன உரிமையாளரான ராகேஷ் செளத்ரியைத் தொடா்பு கொண்டபோது அவா் முறையான பதில் அளிக்கவில்லை.
இரும்புப் பொருள்களை திட்டமிட்டு மோசடி செய்ததாக ராகேஷ் சௌத்ரி மீது ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது
பெங்களூரில் கேரள மாணவா்கள் மீது தாக்குதல்: கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


