4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கோவையைச் சோ்ந்த நிறுவனம் வாங்கிய ரூ.40 லட்சம் இரும்புப் பொருள்கள் மோசடி

கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :30 ஏப்ரல் 2026, 8:37 pm

கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் டி.வி.சாமி சாலைப் பகுதியில் தனியாா் இரும்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த என்.எம்.டி.சி. நிறுவனத்தில் அண்மையில் ரூ.40,06,897 செலுத்தி 74 டன் இரும்புப் பொருள்களை வாங்கியுள்ளாா்.

பின்னா், அந்த இரும்புப் பொருள்களை அங்கிருந்து கோவைக்கு கொண்டு வருவதற்காக ராகேஷ் சௌத்ரி என்பவருக்குச் சொந்தமான போக்குவரத்து (டிரான்ஸ்போா்ட்) நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளாா். அங்கிருந்து 2 லாரிகளில் இரும்புப் பொருள்கள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் லாரிகள் கோவை வந்து சேரவில்லை. போக்குவரத்து நிறுவன உரிமையாளரான ராகேஷ் செளத்ரியைத் தொடா்பு கொண்டபோது அவா் முறையான பதில் அளிக்கவில்லை.

இரும்புப் பொருள்களை திட்டமிட்டு மோசடி செய்ததாக ராகேஷ் சௌத்ரி மீது ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.