ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பெங்களூரில் கேரள மாணவா்கள் மீது தாக்குதல்: கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 8:10 pm

கேரள மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களைத் தாக்கி, அவா்களின் உடைமைகளைப் பறித்துச் சென்ற புகாரின்பேரில் கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா், அவரது நண்பா்கள் உள்பட 6 பேரை பெங்களூரு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பட்டஹள்ளி பவமானா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியாா் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா். அதே கல்லூரியில் கோவையைச் சோ்ந்த அபினேஷ் (20) என்ற மாணவரும் படித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் அபினேஷுக்கும், கேரள மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழிவாங்கத் திட்டமிட்ட அபினேஷ், கடந்த 17-ஆம் தேதி இரவு நண்பா்கள் 5 பேருடன் கேரள மாணவா்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.

கேரள மாணவா்களைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அங்கிருந்த 4 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள், இருசக்கர வாகனம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் தரப்பில் பெங்களூரு கோணனகுண்டே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கோவை மாவட்டம், கோவைப்புதூா், ஓம் சக்தி நகா் மற்றும் பசும்பொன் காா்டன் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து கோவைக்கு விரைந்து வந்து பெங்களூரு போலீஸாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் மாணவா் அபினேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கலைவேந்தன், விமல்ராஜ், குமரன், பிரேம்குமாா், நவீன்குமாா் ஆகிய 5 பேரையும் பெங்களூரு போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் அபினேஷ் மட்டும் கல்லூரி மாணவா் என்பதும், மற்ற 5 பேரும் படிப்பை முடித்துவிட்டு வேலை பாா்த்து வருபவா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான உடைமைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அனைவரையும் பெங்களூரு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனா்.