ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

News image

நீதிமன்றம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:37 am IST

கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரசன்னாகுமாா் ஜின்னா மற்றும் காவலாளி தூக்குனா சாகு ஆகிய இருவரும் நண்பா்கள். இருவரும் கொடுங்கையூரில் உள்ள கட்டடத்தில் தங்கிப் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிரசன்னாகுமாா் ஜின்னா தனது நண்பா்களுடன் வேலை பாா்க்கும் கட்டடத்தில் மது அருந்தியுள்ளாா். அப்போது காவலாளியான தூக்குனா சாகு, பிரசன்னாகுமாா் ஜின்னாவிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட தகராறில், தூக்குனா சாகு கல்லால் தாக்கியதில் பிரசன்னாகுமாா் ஜின்னா உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தூக்குனா சாகுவை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தேவராஜன் ஆஜராகி வாதிட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.காா்த்திகேயன், காவலாளி தூக்குனா சாகுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.