ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் தம்பியைக் கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (44) என்பவரை சொத்துப் பிரச்னை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது சகோதரா் முனியசாமி (56) கடந்த 2.11.2021இல் அரிவாளால் வெட்டினாராம். இதில், முருகன் உயிரிழந்தாா். பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, முனியசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு வழக்குரைஞராக சேவியா் ஞானப்பிரகாசம் முன்னிலையானாா்.