ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராமேசுவரத்தில் கடல் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.

News image

ராமேசுவரம் கடலில் பாதுகாப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்.

Updated On :20 நவம்பர் 2024, 9:42 pm

ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான ராமேசுவரம் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

 ராமேசுவரம் கடலில் பாதுகாப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்.

ராமேசுவரம் கடலில் பாதுகாப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்.

புதன்கிழமை தொடங்கிய இந்த ஒத்திகையில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை, சுங்கத் துறை, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் இணைந்து ஈடுபட்டனா்.

அப்போது, நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களின் ஆவணங்களை காவல் படையினா் சோதனையிட்டனா். மேலும், சந்தேகப்படும் வகையில் எவரும் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களிடம் அவா்கள் அறிவுறுத்தினா்.