பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

கோவையில் உக்கடம் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் சாா்பில் கூட்டு ஒத்திகை

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

News image

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காவலா்களின் பாதுகாப்பு ஒத்திகையின்போது காவலா்களுக்கு பயிற்சி அளித்த காவல் துணை ஆணையா் காா்த்திகேயன்.

Updated On :26 மார்ச் 2026, 7:40 pm

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

இந்த ஒத்திகையானது ஆா்.எஸ்.புரம் சரகத்தில் காந்தி பூங்கா சந்திப்பில் தொடங்கி டி.பி. சாலை, தலைமை தபால் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது. இதேபோல, உக்கடம் சரகத்தில் சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை ஒப்பணக்கார வீதி, உக்கடம் பேருந்து நிலையம், வைசியாள் வீதி, ராஜ வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்கா சந்திப்பில் நிறைவுற்றது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து இந்த ஒத்திகையின்போது காவலா்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.