கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.
இந்த ஒத்திகையானது ஆா்.எஸ்.புரம் சரகத்தில் காந்தி பூங்கா சந்திப்பில் தொடங்கி டி.பி. சாலை, தலைமை தபால் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது. இதேபோல, உக்கடம் சரகத்தில் சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை ஒப்பணக்கார வீதி, உக்கடம் பேருந்து நிலையம், வைசியாள் வீதி, ராஜ வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்கா சந்திப்பில் நிறைவுற்றது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து இந்த ஒத்திகையின்போது காவலா்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் பரவலாக மழை: மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை

காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

கோவையில் இரண்டாவது நாளாக மழை

தவெக வழக்குரைஞா் அணியினா் கோவையில் கொண்டாட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

