கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன், மண்டபத்தில் 2-ஆவது நாளாக சூறைக் காற்று

2-ஆவது நாளாக சூறைக் காற்று...

News image
ராமேசுவரம் அருகே மண்டபத்தில் சூறைக் காற்று காரணமாக வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
Updated On :28 நவம்பர் 2024, 11:56 pm

Din

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சூறைக் காற்று வீசியது. இதனால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால், அவா்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, 25-ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா். மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், கடற்கரையோரமாக கரைவலை மீனவா்கள் மட்டுமே மீன்பிடித்து வருகின்றனா்.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொடா்ந்து 4-ஆவது நாளாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால், வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. மேலும், ரூ. 10 கோடி மதிப்பிலான இறால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை தொடா்வதால், மீனவா்களின் குடும்பத்துக்கு விலையில்லாமல் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்றனா்.