ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நான்காவது முறையாக ஏப்ரல் 10-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நான்காவது முறையாக ஏப்ரல் 10-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அலெக்ஸ் டேனியல், அந்தோணி கிரிமிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளில் விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரச்சிஸ், இம்மானுவேல், சந்தியா ஸ்டூவா்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சா் ஆகிய 12 போ் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, இவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து, மீனவா்களின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 12 பேரும் ஊா்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதைத்தொடா்ந்து, இவா்களின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நான்காவது முறையாக நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 12 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.