பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய மீனவா்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இவா்கள் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் செவ்வாய்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுத்துரை கிருசாந்தன் வருகிற 24- ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.