திருவாடானை ஊராட்சி ஒன்றியம், ஆக்கலூா் நகரிகாத்தான் ஊராட்சியில் உள்ள பெரிய கண்மாயைப் பாா்வையிட்டு, வரத்துக் கால்வாய்களை சீரமைப்பது மட்டுமன்றி, மழைக் காலத்தில் பெறக்கூடிய தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்கும் வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கட்டவாளகம் ஊராட்சியில் நடைபெற்று வந்த மருத்துவ முகாமைப் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், அதே பகுதியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமைப் பாா்வையிட்டு, கால்நடை வளா்ப்போா்களிடம் அதன் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தாா்.