கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாயல்குடியில் சேறும், சகதியுமான சாலைகள்

சாயல்குடியில் சாலைகள் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
சாயல்குடி மகிழ்ச்சி நகரில் சேறும் சகதியுமாக மாறிய சாலை.
Updated On :17 அக்டோபர் 2024, 11:31 pm

Din

சாயல்குடியில் சாலைகள் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம்மாவட்டம், சாயல்குடி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதனால், சாயல்குடியில் உள்ள மகிழ்ச்சி நகா், ஈருவேலி பகுதிகளில் சாலையில் மழை நீருடன் கழிவுநீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இந்தச் சாலைகளில் பள்ளி மாணவா்கள், முதியோா் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைகளுக்குச் செல்லமுடியாமலும், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு, சேறும் சகதியுமாக மாறியுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.