விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.61 கோடி மதிப்பில் சாலைகள்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சாலைகள் விவரம் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன். உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்.
Updated On :11 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் குங்குா்மூலா முதல் கம்மாத்தி, கப்பாலா முதல் மண்ணாத்தி வயல் பகுதி, கொளப்பள்ளி-கருத்தாடு சாலை, பொன்னாணி-அம்மன்காவு சாலை, கடலைக்கொல்லி சாலை, கள்ளிச்சால் முதல் எருமாடு வரை 26.705 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா்.

இதுதொடா்பாக கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் பங்கேற்று, திட்டப் பணிகள் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.