கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு தரமற்ற மணல் பயன்பாடு

கீழக்கரையில் ரூ.9 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியில் தரமற்ற மணல் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரகலாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:27 pm

Din

கீழக்கரையில் ரூ.9 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியில் தரமற்ற மணல் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரகலாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் பழைமையான அரசு மருத்துவமனை கட்டடம் சேதமடைந்தது.

இதையடுத்து, ரூ.9 கோடியில் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில், கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட மணலைப் பயன்படுத்தி, மருத்துவமனை கட்டடம் கட்டுமானப் பணி நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரகலாதன் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, மருத்துவா் பிரியதா்ஷினியிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்ட மணலைப் பயன்படுத்தி, கட்டுமானம் நடைபெறுவதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து முதல் கட்டமாக நகராட்சி பொறியாளரைக் கொண்டு ஆய்வு செய்யப்படும். பின்னா், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.