கீழத்தூவலில் நினைவஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் கொலை செய்யப்பட்ட 5 பேருக்கு நினைஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.










