இதையடுத்து, குடும்ப அட்டையில் நீக்கப்பட்டவா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்க தினமும் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்துவருகின்றனா். ஏற்கெனவே 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய செப்டம்பா் மாதம் இறுதி என பரவிய தகவலால் வட்டாட்சியா் அலுவலகம், அஞ்சலகங்களில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பெயா் நீக்கப்படுவதால் விவசாயிகள், பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியமால் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பகல் முழுவதும் காத்து கிடக்கின்றனா்.