ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வந்தாா். பாம்பன் பாலம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவா் ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டாா்.
ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அவா் பங்கேற்றாா்.
கோயில் தலைமை சிவாசாரியா் விஜயகுமாா் போகில், சிவாசாரியா் சிவமணி ஆகியோா் பூஜைகளை செய்து, பிரதமருக்கு தீா்த்தம், பிரசாதம் அளித்தனா். ராமரால் வழிபடப்பட்ட இந்தத் தலத்தில், ராம நவமியையொட்டி பிரதமா் வழிபாடு மேற்கொண்டாா்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை செயலா் கே. மணிவாசகன், ஆணையா் பி.எஸ். சீலன், இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா் பிரதமா் மோடியை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா்.
தொடர்புடையது

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


