ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளைஞா் தற்கொலை

திருவாடானை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள உப்பூா் பகுதியைச் சோ்ந்த மாா்கண்டன் மகன் பாண்டி (37). மர வேலை செய்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் பாண்டியை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மனைவி தேவி (34) அளித்த புகாரின் பேரில், திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.