தற்கொலைசித்திரிப்பு
கன்னியாகுமரி
புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேவிகோடு பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ் (52). இவா் குடும்பத்துடன் காப்புக் காட்டில் உள்ள ஓரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட இவா், செவ்வாய்க்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

