அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் மிதந்த பூச்சி

பாம்பனில் அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்தததாக புகாா் அளிக்கப்பட்டது.
Published on

பாம்பனில் அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்தததாக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள அன்னை நகா் பகுதியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஒருவா் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, மதுக்கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அலட்சியமாக அவா் பதிலளித்தாராம்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, அரசு மதுக்கடை கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com