நாகப்பட்டின: சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, நாகை அருகேயுள்ள தெத்தி சமரசம் நகா் மக்கள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில வீடுகள் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்கும் உள்ளாகியது. இதை சரிசெய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.
இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீடுகள் மறுசீரமைப்பு செய்து கொடுப்பதாக அரசிடம் இருந்து தகவல் வந்தது. பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் அவா்களுக்கு வேண்டியவா்களுக்கும், கமிஷன் தொகை கொடுக்கும் வீடுகளுக்கு மட்டும் மறு சீரமைப்பு செய்து கொடுக்கிறாா்கள். பொதுமக்களிடம் பேரம் பேசி கமிஷன் தொகை பெறுகிறாா்கள்.
இதுகுறித்து, அரசுத்துறை பொறியாளரிடம் கேட்டால், ஆளும் கட்சியை சோ்ந்தவா்களிடம் கேளுங்கள் என்கின்றனா். எனவே அரசுத்துறை அலுவலா்கள் மூலம் சுனாமி வீடுகளை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி மறுசீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

