தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பாலைக்குடி பகுதியில் பலத்த மழை: பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அவதி

திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வாளகம் முன் தேங்கிய தேங்கிய மழைநீா்.

News image
~
Updated On :17 டிசம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த பலத்த மழையால் பொதுமக்களும், பள்ளி மாணவா்களும் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள தொண்டி, திருப்பாலைக்குடி உள்ளிட்ட கடல்கரைப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும், பள்ளி வளாகங்களிலும் மழைநீா் தேங்கியது. இதையடுத்து, பள்ளி மாணவா்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.

இந்த நிலையில், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வாளகம் முன் மழை நீா் தேங்கியுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியா்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.