ராமநாதபுரம்
பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 82 பேருக்கு அபராதம் விதிப்பு
மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவா்கள் 82 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவா்கள் 82 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்த மதுரை- ராமேசுவரம் ரயிலில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 82 பயணிகள் வந்தனா். இவா்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தது, சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ஒவ்வோா் பயணிக்கும் தலா ரூ. 300 வீதம் ரூ. 24,600 அபராதம் விதிக்கப்பட்டது.
