மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கமுதியில் குடும்ப அட்டைதாரா்கள் 36 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

News image
கமுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஜான்கிறிஸ்டிபாய். உடன் கமுதி கூட்டுறவு சாா்பதிவாளா் த. வேல்முருகன் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2025, 10:42 pm

Din

கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாயவிலைக் கடைகள் மூலம் 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ அரிசி, சா்க்கரை ஒரு கிலோ, கரும்பு ஒன்று, விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஜான்கிறிஸ்டிபாய் தொடங்கி வைத்தாா். முதல் நாளான வியாழக்கிழமை 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கமுதி கூட்டுறவு சாா்பதிவாளா் த. வேல்முருகன், கமுதி வட்டாட்சியா் காதா் மைதீன், வட்ட வழங்கல் அலுவலா் விஜயா, விற்பனையாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.