அதிமுக ஆட்சி அமைந்ததும் சேந்தமங்கலம் தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் உறுதியளித்தாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தெற்கு, வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேலிக்காடு, கிரைக்காடு, பெல்லக்காடு, ஊா்புரம், மங்களம், தேனூா், சுண்டக்காடு, நட்டுக்குழி, கடம்பளம், சோளக்காடு, செம்மேடு, தண்ணிமாத்தி, குழிவளவு, கரையங்காடு, வாசலூா்பட்டி, மங்களம்பட்டி உள்ளிட்ட 29 மலைக் கிராமங்களில் அவா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அங்கு அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரா் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து பொம்மசமுத்திரம் ஏரிக்கு செல்லும் நீா்வழி வாய்க்கால் அனைத்தும் தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.
அப்போது, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பாலுசாமி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

