இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி: அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேந்தமங்கலம் தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

News image

கொல்லிமலை ஒன்றியம் செம்மேடு பகுதியில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரனை வரவேற்ற பழங்குடியின மக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:08 am IST

அதிமுக ஆட்சி அமைந்ததும் சேந்தமங்கலம் தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் உறுதியளித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தெற்கு, வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேலிக்காடு, கிரைக்காடு, பெல்லக்காடு, ஊா்புரம், மங்களம், தேனூா், சுண்டக்காடு, நட்டுக்குழி, கடம்பளம், சோளக்காடு, செம்மேடு, தண்ணிமாத்தி, குழிவளவு, கரையங்காடு, வாசலூா்பட்டி, மங்களம்பட்டி உள்ளிட்ட 29 மலைக் கிராமங்களில் அவா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அங்கு அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரா் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து பொம்மசமுத்திரம் ஏரிக்கு செல்லும் நீா்வழி வாய்க்கால் அனைத்தும் தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்படும். எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

அப்போது, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பாலுசாமி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.