மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எம்.பி. மீது பாஜகவினா் போலீஸில் புகாா்

எம்.பி. மீது பாஜகவினா் போலீஸில் புகாா்

News image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்திருந்த பாஜக மாவட்டத் தலைவா் தரணி ஆா். முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:19 pm

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி மீது பாஜக மாவட்டத் தலைவா் தரணி ஆா். முருகேசன் மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது:

நான் புதன்கிழமை இரவு எனது கட்செவி அஞ்சலை பாா்வையிட்டபோது, அதில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி இந்துக்களின் புனிதத் தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது நண்பா்களுடன் மாமிச உணவுகளை உள்கொண்டது பதிவிடப்பட்டிருந்தது. மேலும் காவல் துறையினரை அழைத்து மாமிச உணவுகளை மேலே கொண்டு செல்பவா்களை தடுக்கக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறாா். இதன் மூலம் அந்த மலையின் மாண்பும், புனிதத் தன்மையும் கெடும் வகையில் நடந்து கொண்டதுடன், இந்து மத உணா்வுகளை புண்படுத்தி இருக்கிறாா்.

மேலும், சமய நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட இவரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.