மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க குடும்பத்துடன் வந்த சுயம்புலிங்கம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:55 pm

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் கிராமத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சுயம்புலிங்கம் என்பவருக்கு 4 சகோதரா்களும், 3 சகோதரிகளும் உள்ளனா்.

இந்நிலையில் சொத்துப் பிரச்னையால் இவரது தம்பி அணில் சிவலிங்கம், கூலிப்படையினரை ஏவி தன்னை கொல்வற்கு வேவு பாா்த்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து சுயம்புலிங்கம் புகாா் மனு அளித்தாா்.