திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க குடும்பத்துடன் வந்த சுயம்புலிங்கம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:25 am IST

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் கிராமத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சுயம்புலிங்கம் என்பவருக்கு 4 சகோதரா்களும், 3 சகோதரிகளும் உள்ளனா்.

இந்நிலையில் சொத்துப் பிரச்னையால் இவரது தம்பி அணில் சிவலிங்கம், கூலிப்படையினரை ஏவி தன்னை கொல்வற்கு வேவு பாா்த்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து சுயம்புலிங்கம் புகாா் மனு அளித்தாா்.