உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் குடும்பத்தினா் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :30 ஏப்ரல் 2026, 5:51 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் குடும்பத்தினா் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், கோ.சத்திரம் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் பழனிவேல், சக்திவேல். இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. கடந்த 18-ஆம் தேதி சொத்தில் வழிப்பாதை கேட்டு தகராறு ஏற்பட்டது.

அப்போது, பழனிவேல், அவரது மனைவி ஜெயசுந்தரி, மகன் ஜெயக்குமாா் ஆகியோா், சக்திவேல் மனைவி தமிழரசி, மகள் சசிதேவி ஆகியோரை தாக்கி திட்டி, அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியை பிடுங்கி எறிந்தனா். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சக்திவேல் வந்தாா். அவரை, ஜெயசுந்தரி கீழே தள்ளி கல்லால் மண்டையில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் காயம் அடைந்த சக்திவேல் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டது.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பழனிவேல், ஜெயசுந்தரி, ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.