மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இந்தியாவின் கடல் பரப்பை விரிவுபடுத்தியவா் இந்திரா காந்தி

1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image
பாம்பனில் 100 அடி உயரக் கம்பத்தில் வியாழக்கிழமை காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.
Updated On :23 ஜனவரி 2025, 10:10 pm

Din

1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் வியாழக்கிழமை 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ தலைமை வகித்தாா். இதில் பங்கேற்று காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து செல்வப் பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2014- ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவா் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் ‘கடல் தாமரை மாநாடு’ நடத்தப்பட்டது. அப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கைக் கடற்படையால் மீனவா்கள் கைது செய்யப்படுவது, அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சா்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன், அவா்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தடுக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது, 1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 4 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு இந்திய கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. இதுதான் ராஜதந்திரம்.

ஆனால் மத்திய பாஜக அரசு, அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியையும், ஜம்மு- காஷ்மீரில் உள்ள லடாக்கின் ஒரு பகுதியையும் சீனாவிடம் பறிகொடுத்துவிட்டு கை கட்டி வேடிக்கை பாா்க்கிறது. இதுதான் மத்திய பாஜக அரசின் ராஜதந்திரமா? இந்திரா காந்தியை குறை கூறுபவா்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா? வாஜ்பாய் பாராட்டைப் பெற்றவா்தான் இந்திரா காந்தி. இதை பாஜகவினா் மறுக்க முடியுமா?

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைதான் விளக்க வேண்டும் என்றாா் அவா்.