யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆதி கைலாய ஈஸ்வரா், சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

ஆதிகைலாய ஈஸ்வரா், சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா முதல் கால பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.

News image
~ ~
Updated On :8 நவம்பர் 2025, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள ஆதிகைலாய ஈஸ்வரா், சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா முதல் கால பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) இரண்டாம் கால பூஜையும், திங்கள்கிழமை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. அத்துடன் கால பைரவா், ஸ்ரீ வாராஹி அம்மன், 18 சித்தா்கள், அறுபடை முருகன் சந்நிதிகளில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் பங்கேற்கின்றனா். இந்த விழாவின் போது சிவனடியாா்கள் ஆன்மிக சொற்பொழிவாற்றுகின்றனா். மேலும் பவளக்கொடி கும்மி கலைக் குழுவினரின் கும்மியாட்டமும் நடைபெறுகிறது.