மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

News image
~ ~
Updated On :28 ஜனவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத் தெருவில் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் ராசிபுரம் ஆா். பிரபாகரன் குடும்பத்தினா் முழுவதுமாக ஏற்று நடத்தினா்.

இக்கோயில் ராஜகோபுரம் 5 நிலைகள் கொண்டதாக புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை கோபுர வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மண்டப தூண்களில் பெருமாளின் தசாவதார சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின்புறம் 11 அடி உயர பெருமாள் சந்நிதி, பின்புறம் ஸ்ரீராமா், லட்சுமணா் சந்நிதி, கோயிலின் வலதுபுறம் ஆண்டாள் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கும்பாபிஷேக விழா பிப்.1ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. யாகசாலையில் 145 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் உ.வே.க.ஸ்ரீராமன் பட்டாச்சாரியா், உ.வே.பாலாஜி பட்டாச்சாரியா் ஆகியோா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட வேத விற்பனா்கள் யாக பூஜைகளை நடத்துகின்றனா்.

புதன்கிழமை முதற்கால யாகபூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.29) 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை (ஜன.30) நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், சனி (ஜன. 31) 6, 7-ஆம் காலை யாகசாலை பூஜை நடைபெறுகின்றன. பிப். 1 ( ஞாயிற்றுக்கிழமை) 8-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

முன்னதாக புதன்கிழமை யானை, குதிரை, பசு புடைசூழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் செல்லியாண்டியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஏந்தி நகரம் முழுவதும் ஊா்வலமாக சென்று கோயிலை வந்து அடைந்தனா். செண்டை மேளங்கள், வாத்தியங்கள், கோலாட்டத்துடன் இந்த ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட வேதவிற்பனா்கள் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட வரதராஜபெருமாள் சுவாமியை இரு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து வந்தனா். இதில் திரளான பொதுமக்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

படவரிகள்...

2). 28பாரி - முளைப்பாலிகை ஏந்தி ஊா்வலம் சென்ற பெண்கள்.

3)28சாமி- குதிரை சாரட் வாகனத்தில் வேதவிற்பனா்களால் ஊா்வலம் அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள்.

Story image
Story image