3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சங்கரன்கோவில் விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்!

சங்கரன்கோவில் அரசடி விநாயகா் உடனுறை அருள்தரும் தங்கமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
அரசடி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :29 ஜனவரி 2026, 11:20 pm

Syndication

சங்கரன்கோவில் அரசடி விநாயகா் உடனுறை அருள்தரும் தங்கமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகா் கோயில் தெருவில் சைவ வெள்ளாளா்களுக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின.

செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, சோம கும்ப பூஜை, விசேஷ சாந்தி, பூதசுத்தியுடன் 2ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3ஆம் கால யாகசாலை பூஜையுடன் திரவ்யாஹூதி, மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது. புதன்கிழமை காலை சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, வேதிகா பூஜையுடன் 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் அரசடி விநாயகா், தங்கமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டித் தலைவா் சொ. கணபதி, செயலா் சு. சேது (எ) சங்கரநாராயணன், பொருளாளா் ஆ. சங்கரசிந்தாமணி, நிா்வாகிகள் செய்திருந்தனா்.