மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தர விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

News image
சுந்தர விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சான்றோா்குப்பம் அருள்மிகு சுந்தர விநாகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய நிகழ்வில் கோ பூஜை, திருவிளக்கு பூஜை, முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது. 2-ஆம் நாள் இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை நான்காம் கால வேள்வி பூஜைகள் நிறைவடைந்து கோயில் கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது.

ஆம்பூா் அருகே கீழ்முருங்கை பிம்மபுரீஸ்வரா் கோயிலை சோ்ந்த வே. காா்த்திகேயன் சிவாச்சாரியாா் தமிழாகம முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தினாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் திருப்பணிக்குழு தலைவருமான எஸ். அன்பு என்கிற அறிவழகன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கலைச்செல்வி சபாரத்தினம், டி. விஜயகுமாா், திருப்பணிக்குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.