தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நீதித்துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மாவட்ட சாா்பு நீதிபதி பாஸ்கா் பேசியதாவது: சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் விபத்திலிருந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். தலைக்கவசம் அணிவதால் தலையில் காயம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்றாா் அவா்.

இதில், கடலாடி நீதிபதி சாதுசுப்பிரமணியன் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்தும், இந்தச் சட்டத்தால் பெண்கள் அடையும் நன்மைகள் குறித்தும் சிறப்புரையாற்றினாா். கடலாடி மூத்த வழக்குரைஞா் சக்திவேல் இலவச சட்ட மையத்தின் பணிகள் குறித்தும், அதனால் ஏழை எளிய மக்கள் அடையும் பயன்கள் குறித்தும் விளக்கினாா். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றாா். ஆசிரியா் சொக்கா் நன்றி கூறினாா்.