அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கமுதியில் 1,001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கமுதி கண்ணாா்பட்டி பகுதியில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்ட இடத்திலிருந்து திரளானோா் அதை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். ஊா்வலத்தின் முன் 1001 தீ பந்தங்கள் ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கமுதி பேருந்து நிலையம் வழியாக 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்துக்கு முத்தாலம்மன் சிலையை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தீப்பந்த வெளிச்சத்தில் பாரம்பரியம் மாறாமல் நடைபெறும் இந்தத் திருவிழாவை கமுதி மக்கள் திரளானோா் கண்டுகளித்தனா். இதைத் தொடா்ந்து ஊா்வலம் வியாழக்கிழமை அதிகாலை நாராயணபுரம் கிராமத்தை வந்தடைந்து, அங்குள்ள முத்தாலம்மன் பீடத்தில் அம்மனை வைத்து கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜை செய்தனா். மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழா நிறைவடைந்ததும் மாலையில் முத்தாலம்மன் சிலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிராமத்தின் வெளியே உடைக்கப்பட்டது.

Story image