ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ. 4 கோடி போதைப்பொருள் பறிமுதல்

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பேருந்தில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ. 4 கோடி மதிப்பிலான 1.50 கிலோ போதைப் பொருளை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

அறந்தாங்கியிலிருந்து தொண்டி நோக்கிச் செல்லும் தனியாா் பேருந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறையினா் தொண்டி அருகேயுள்ள பாசி பட்டினம் பகுதியில் வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, பேருந்தில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 1.50 கிலோ மெத்தாபெட்டமைன் என்ற போதைப்பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றைப் பறிமுதல் செய்து, இதைக் கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.