அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 273 மனுக்கள் அளிப்பு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 273 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அளித்தனா்.

இந்த மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாா். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக்-2025 போட்டியில், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்து வரும் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெற்றனா். இவா்கள் இதற்கான கோப்பையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) ரகுபதி, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் தினேஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.