எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கமுதியில் ஊரக வளா்ச்சித் துறை கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

கமுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் எ.முருகன் தலைமை வகித்தாா். கமுதி ஒன்றியத் தலைவா் குருமூா்த்தி, மாநில இணைச் செயலா் ஜெயபாரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சென்னையில் வருகிற திங்கள்கிழமை (நவ.24) 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டம், தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கமுதி ஒன்றியத்திலிருந்து 49 ஊராட்சி செயலா்கள், 286 தூய்மைக் காவலா்கள், 149 தூய்மைப் பணியாளா்கள், 124 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டா்கள், 36 திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 644 போ் பங்கேற்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஊராட்சி செயலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் கமுதி ஒன்றியப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.