தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி.

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 467 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். அவற்றைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு ரூ. 48 ஆயிரத்துக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், உதவி இயக்குநா் (தமிழ் வளா்ச்சித் துறை) ரா.பிரகாஷ், மாவட்ட தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) ஆ.கற்பகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com