விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கமுதியிலிருந்து கிராமங்களுக்குப் புதிய பேருந்து இயக்கம்

News image
கமுதியிலிருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்ட புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன்.
Updated On :23 நவம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு புதிய பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்ட 1-ஆம் எண் பேருந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் சாா்பில் முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வனம், கதா் கிராம தொழில்கள் வாரிய அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், திமுக மாவட்டச் செயலரும், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரது முயற்சியில் பழைய பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்பட்டது.

இந்தப் பேருந்தை கமுதி திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கமுதி போக்குவரத்துக் கிளை மேலாளா் குமரவேல், தொழிலாளா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலா் பச்சைமால், தொமுச பொருளாளா் ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளா் துரைமுருகன், புதுக்கோட்டை முன்னாள் கிளைச் செயலா் வாட்டா் போா்டு முத்துராமலிங்கம், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.