ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா

News image
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :30 நவம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் இளம் தொழில் முனைவோா் மையம் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிா் பூங்காவில், இந்திய அறிவியலாளா் சா். ஜெகதீஷ் சந்திர போஸின் 167-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ராமநாதபுரம் இளம் தொழில் முனைவோா் மையம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு பசுமை மரக்கன்றுகளின் தூதுவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் தலைவா் மதன் குமாா், துணைத் தலைவா் நரேஷ், செயலா் ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளா் சங்கா், நிா்வாகிகள், உறுப்பினா்கள்கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பசுமை முதன்மையாளா் சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தாா்.