தொண்டி அருகே உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு வெள்ளிக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி சரோஜா (55) வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா் . அவரது உறவினா்கள் வழக்கமான மயானப் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா்.
இந்த நிலையில், மயானம் பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தது என்பதால் இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சின்னஅரியப்புவயல் கிராம மக்கள் மண்வெட்டிகளுடன் மயானத்து வந்து சவக்குழி வெட்ட ஆரம்பித்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி, எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், அதே இடத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புடையது
கொழுப்பு பிரச்னையால் இந்திய ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு!

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி

கமேனியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு!

மயான வசதி அமைத்துத் தரக் கோரி கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


